சிங்கப்பூரில் வேலை செய்யும் வெளிநாட்டு வேலையாட்களுக்கு மணப்பெண் தேட உறுதுணையாய் நிற்கும் போட்டோகிராபர்.
சிங்கப்பூரில் இந்தியர்கள் அதிகம் வசிக்கும் புகழ் பெற்ற பகுதியான லிட்டில் இந்தியா மாகாணத்தின், கே சஞ்சீவ் லால் என்பவர் சொந்தமாக புகைப்பட ஸ்டுடியோ கடை நடத்தி வருகிறார். இவர் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு மணப்பெண் பார்க்க மிகவும் உதவியாக இருந்து வருகிறார்.
அதுவும் பெரும்பாலான இந்திய தொழிலாளர்களுக்கு இந்த புகைப்படம் மணப்பெண் கிடைக்க பேருதவியாக இருந்து வருகிறது.
சஞ்சீவ் எடுக்கும் நேர்த்தியான புகைப்படத்தை வாடிக்கையாளர்கள் தங்களுடைய சொந்த நாட்டுக்கு மணப்பெண் பார்ப்பதற்காக தங்களுடைய குடும்பத்திற்கு அனுப்பி வைக்கின்றனர்.
சஞ்சீவ் கடந்த சில வருடங்களில் இதுபோன்ற வேலையாட்களுக்கு, அவர்களுடைய வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க மிகவும் உறுதுணையாக இருந்துள்ளார். மேலும் இதன் மூலம் திருமணமான பல தம்பதியினர், இவரிடம் புகைப்படம் எடுக்க ஜோடியாக செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Source : Yahoo News