தென்கிழக்கு ஆசிய நாடுகளில் தமிழ் மொழியை வளர்க்க சிங்கப்பூர் தமிழ் இளையர் மன்றம் முயற்சி..!

Promoting Tamil in southeast Asia

மலேசியா, இந்தோனேசியா, மியன்மார் (பர்மா) ஆகிய நாடுகளில் வாழும் தமிழர்கள் மத்தியில் தமிழ் நூல்களின் வழியாக தமிழை வளர்க்க சிங்கப்பூர்த் தமிழ் இளையர் மன்றம் முயற்சி செய்து வருகிறது.

இதில் ஒரு பகுதியாக, உங்களிடம் இருக்கும் பழைய தமிழ் புத்தகங்களை சிங்கப்பூர் தமிழ் இளையர் மன்றத்திற்கு நன்கொடையாக அளிக்குமாறு அறிவிப்பு செய்துள்ளது.

நன்கொடையாக பெற்ற பழைய தமிழ் புத்தகங்களை, தமிழ் கற்பிக்கும் பள்ளிகளுக்கும், கோயில்களுக்கும் சிங்கப்பூரின் அன்பளிப்பாக வழங்குவதாக மன்றம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புத்தகங்களை கீழே உள்ள முகவரிக்கு, தொடர்புகொண்டு அனுப்பலாம்:

மா. பாலதண்டாயுதம்,
தலைவர்,
சிங்கப்பூர்த் தமிழ் இளையர் மன்றம்.