சிங்கப்பூர் புங்க்கோல் பீல்ட் (Punggol Field) மரணம்: 20 வயதான சந்தேக நபர் கைது..!

Punggol Field death: 20-year-old man arrested, to be charged with murder
Punggol Field death: 20-year-old man arrested, to be charged with murder (Photo: Daymon Lim)

சிங்கப்பூரில் கடந்த வாரம் புங்க்கோல் பீல்ட் சாலையில் ஒருவர் உயிரிழந்ததன் தொடர்பாக 20 வயதான சந்தேக நபர் ஒருவர் சனிக்கிழமை (மே 16) கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலை 2.45 மணியளவில் அந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை செய்தி வெளியீட்டில் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க : புங்க்கோல் பீல்டில் (Punggol Field) காயங்களுடன் கிடந்து உயிரிழந்த ஆடவர்; காவல்துறை விசாரணை தொடர்கிறது..!

அவர் மீது ஞாயிற்றுக்கிழமை நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் பலியான 38 வயதான அந்த நபர், கடந்த மே 10 அன்று புங்க்கோல் பீல்டில் காயமடைந்த நிலையில் கிடந்தார்.

அதனை தொடர்ந்து, அந்த நபர் செங்காங் பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் என்றும், பின்பு அங்கு அவர் காயங்களால் உயிரிழந்தாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மனநல சோதனைக்காக சந்தேக நபரை மனநல நிறுவனத்தில் ரிமாண்ட் செய்ய நீதிமன்ற உத்தரவைப் பெற அரசு தரப்புடன் இணைந்து செயல்படுவார்கள் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க : சிங்கப்பூரில் புதிதாக 465 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதி..!