COVID-19 வைரஸ் தொற்று பற்றிய உங்கள் கேள்விகளுக்கான பதில்கள் மற்றும் அறிவுரைகளையும் சிங்கப்பூர் அரசு வழங்கியுள்ளது.
சமூக அளவில் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளதா?
தற்போது, சமூக அளவில் இந்த கொரோனா கிருமித்தொற்று ஏற்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளது. ஆனால், நாம் அதற்கு ஆயத்தமாக இருக்கவேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
சிங்கப்பூர் DORSCON விழிப்பு நிலையைச் சிவப்பு நிறத்துக்கு உயர்த்தபட உள்ளதா?
இதற்கு “இல்லை” என அரசு குறிப்பிட்டுள்ளது. DORSCON விழிப்பு நிலையைச் சிவப்பு நிறத்திற்கு உயர்த்துவதற்கான, திட்டங்களும் இல்லை, அதற்கான காரணங்களும் இல்லை.
மேலும், வதந்திகளை நம்பவேண்டாம். ஆக அண்மைத் தகவல்களைப் பெற, சுகாதார அமைச்சகத்தின் (MOH) இணையத்தளம் போன்ற அதிகாரபூர்வ இணைய தளங்களுடன் தொடர்பில் இருங்கள்.
அறிக்கை: Go.gov.sg/not-red
DORSCON கட்டமைப்பின் பல்வேறு விழிப்பு நிலைகள் பற்றி அறிய: www.gov.sg/article/what-do-the-different-dorscon-levels-mean
உங்களுக்குச் சளிக்காய்ச்சலுக்குரிய மிதமான அறிகுறிகள் இருந்தால் என்ன செய்ய வேண்டும்?
- மருத்துவரைக் காணவும்
- வேலைக்கு அல்லது பள்ளிக்குச் செல்லவேண்டாம்
- கூட்டங்களைத் தவிர்க்கவும்
- வீட்டிலேயே இருக்கவும்
ஆக அண்மைத் தகவல்களை இங்கே பெறலாம் : www.moh.gov.sg/covid-19