சிங்கப்பூரில் புற்றுநோய் கண்டறியும் நிறுவனம் COVID-19 வைரஸ் சோதனையை விரைவாக செய்யும் கருவியை அறிமுகப்படுத்தியுள்ளது.
இது ஏப்ரல் இறுதிக்குள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிங்கப்பூரில் பயன்படுத்த சுகாதார அறிவியல் ஆணையத்திடமிருந்து தற்காலிக அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.
இதையும் படிங்க : சிங்கப்பூரில் புதிதாக 47 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதி..!
மேலும் இந்த சோதனைக் கருவிகளின் விலையை வெளிப்படுத்த பயோலிடிக்ஸ் (Biolidics) மறுத்துவிட்டது, ஆனால் இது சந்தையை விட மலிவு விலையில் இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த புதிய கருவியை பயன்படுத்தி 10 நிமிடத்தில் கிருமித்தொற்றை கண்டறிய முடியும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், சோதனை முடிவுகள் 95 சதவீதத்திற்கு மேல் துல்லியமாக இருக்கும் என்று பயோலிடிக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : COVID-19: சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வரும் பங்களாதேஷ் ஊழியர்; ஆண் குழந்தை பெற்றெடுத்த மனைவி..!
#coronavirusSingapore #coronavirusnews #coronavirusupdateinSingapore #Tamilnews #coronavirusupdate #coronavirusSingaporecases #coronavirusinSingapore #SingaporeLatestTamilnews #சிங்கப்பூர்தமிழ்செய்திகள் #Singaporetamil