சிங்கப்பூரில் இந்த 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து ஆட்குறைப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மனிதவள அமைச்சு தெரிவித்துள்ளது.
2020ஆம் ஆண்டின் தொடக்கத்தில் COVID-19 தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து சர்வதேச பயணம் வீழ்ச்சியடைந்துள்ளது. மார்ச் கடைசி வாரத்தில் சாங்கி விமான நிலைய பயணிகள் போக்குவரத்து ஆண்டுக்கு ஆண்டு 98 சதவீதம் குறைந்துள்ளது.
இதையும் படிங்க : சிங்கப்பூர் கூ டெக் புவாட் (Khoo Teck Puat) மருத்துவமனையில் இந்தியர் உயிரிழப்பு..!
உலகளவில், உலக சுற்றுலா மற்றும் சுற்றுலா கவுன்சில், 75 மில்லியன் சுற்றுலாத் துறை தொழிலாளர்கள் வேலை இழக்க நேரிடும் என்று கணித்துள்ளது, அதில் மூன்றில் இரண்டு பங்கு ஆசிய-பசிபிக் பகுதியில் உள்ளது.
கடந்த மாத இறுதிவரை கட்டாயமாக மேற்கொள்ளப்பட்ட ஆட்குறைப்பு அடிப்படையில் அந்த எண்ணிக்கை மதிப்பிடப்பட்டது. மேலும் வரக்கூடிய வாரங்களில் ஆட்குறைப்புக்கு ஆளாவோர் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று மனிதவள அமைச்சு சொன்னது.
வேலைகளைப் பாதுகாக்க அரசாங்கம் பல நடவடிக்கைகளை அறிமுகம் செய்திருந்தாலும், சிங்கப்பூரில் இந்த ஆண்டு அதிகபட்சம் 200,000 பேர் வரை வேலைகளை இழக்கக்கூடும் என்று பொருளியல் வல்லுநர்கள் முன்னுரைத்துள்ளனர்.
சென்ற ஆண்டு மார்ச் மாதம் மனிதவள அமைச்சு வெளியிட்ட அறிக்கையில், 10,690 பேர் ஆட்குறைப்புக்கு ஆளாகியதாக தெரிவிக்கப்பட்டது.
ஆட்குறைப்புக்கு ஆளாவோரில் பாதிப்பேர் வெளிநாட்டினராக இருக்கலாம். அரசாங்கத்தின் ஊக்குவிப்புத் திட்டங்கள், சிங்கப்பூரர்களின் வேலைகளைப் பாதுகாக்க உதவுகின்றன. வேலையின்மை விகிதம் 5 விழுக்காட்டுக்கும் அதிகமாகும் என்று முன்னுரைக்கப்பட்டது என்று செய்தி குறிப்பிட்டுள்ளது.
இதையும் படிங்க : COVID-19 நோயாளிகள் மற்றும் வெளிநாட்டு ஊழியர்களை தங்க வைக்க Tanjong Pagar முனையத்தில் பெரிய இடவசதி..!