Island-wide Public Warning System (PWS) சைரன்கள் மூலம், நாளை செப்டம்பர் 15 ஞாயிற்றுக்கிழமை சரியாக மாலை 6.20 மணிக்கு, ‘முக்கிய செய்தி’கான சிக்னல் ஒலிக்கும் என SCDF தெரிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் யாரும் பீதியடைய வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.
இந்த சிக்னலைக் கேட்டவுடனேயே, நீங்கள் உள்ளூர் ரேடியோ ஸ்டேஷன் அல்லது Free-to-Air மீடியா கார்ப் டிவி சேனலுடன் இணைந்து கொள்ளுங்கள், அதன் வழியாக PWS பற்றிய சுருக்கமான செய்தியை காணலாம்.
மேலும், SGSecure மொபைல் அப் இன்ஸ்டால் செய்யப்பட்ட போன்களுக்கும் இந்த சிக்னல் ஒலிக்கும், என்று SCDF தெரிவித்துள்ளது.