தொடங்கியது சிங்கப்பூரில் இருந்து God’s Own Country -க்கு நான்-ஸ்டாப் விமான சேவை..!!

Scoot விமான நிறுவனம் தற்போது சிங்கப்பூரில் இருந்து கடவுளின் சொந்த நாடு (God’s Own Country) என்று அழைக்கப்படும் கேரளாவின் திருவனந்தபுரத்திற்க்கு தினந்தோறும் நான்-ஸ்டாப் விமானச் சேவையை தொடங்கியுள்ளது.

இதற்கான முதல் விமான பயணம் கடந்த செவ்வாய்க்கிழமை 7 ஆம் தேதி சிங்கப்பூரில் இருந்து 180 இருக்கைகளுடன் கூடிய Airbus A320 விமானம் இரவு 8.40 மணிக்கு புறப்பட்டு திருவனந்தபுத்தை இரவு 10 மணிக்குள் சென்றடைந்தது.

இந்தியாவில் மூன்று இடங்களில் தனது சேவையை தொடங்க உள்ளதாக Scoot விமான நிறுவனம் கூறியுள்ளது. அதற்கான தனது முதல் இந்தியச் சேவையை திருவனந்தபுரத்தில் தொடங்கியுள்ளது. அடுத்த சேவை விரைவில் கோயம்புத்தூர் மற்றும் விசாகப்பட்டினம் என்று அந்நிறுவனம் கூடுதல் தகவல் தெரிவித்துள்ளது.