Scoot நிறுவனம் 4 நகரங்களுக்கு தன் சேவையை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது…

மிக குறைந்த விமான கட்டங்களை வசூலிக்கும் விமான சேவை நிறுவனமான Scoot தற்போது நான்கு இடங்களுக்கு தன்னுடைய விமான சேவையை தற்காலிகமாக நிறுத்த போவதாக தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு கூறியுள்ளது.

சில்க்ஏர் விமான நிறுவனத்தின் Boeing 737 MAX 8 ரக விமான சேவை நிறுத்தப்பட்டதை தொடர்ந்து Scoot விமான நிறுவனத்திடம் விமான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக Scoot விமான சேவைகள் வட இந்தியாவின் லக்னோ (Lucknow), பிலிப்பீன்சின் போரகே (Boracay) தீவின் கலிபோ (Kalibo) விமான நிலையம், சீனாவின் குவாங்சோ (Quanzhou) மற்றும் மாலத் தீவுகளின் தலைநகரமான மாலே ஆகிய நகரங்களில் பாதிக்கப்படும், என்று Scoot நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த சேவை நிறுத்தம் ஜூன் மாதம் நடப்புக்கு வரும் என்று அந்நிறுவனம் கூறியுள்ளது. இந்த திடீர் சேவை நிறுத்தம் அறிவிப்பு Scoot வாடிக்கையாளர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

Source – MediaCorp