பொங்கல் சார்ந்த சர்வதேச பாடல் ஒன்றை சூப்பர் சிங்கர் டைட்டில் வின்னர் செந்தில் கணேஷ், அவரது மனைவி ராஜலட்சுமி ஆகியோர் பாடியிருந்தனர். இதன் படப்பிடிப்பு மற்றும் பாடல் வெளியீட்டு விழா சிங்கப்பூரில் நடைபெற்றது.
இதுகுறித்து தனது பேஸ்புக் பதிவில் செந்தில் கணேஷ், “சிங்கப்பூாில் சிறப்பாக நடந்து முடிந்தது, பொங்கல் சாா்ந்த சா்வதேச பாடல் வெளியீட்டு விழா மற்றும் படபிடிப்பு. நல்லதொரு வாய்ப்பைக்கொடுத்ததோடு பாடலை தயாாித்து வெளியிட்ட திரு.லோகன் சரஸ்வதி அவா்களுக்கும், திரு.சந்தோஷ் நம்பிராஜன் அவா்களுக்கும், திரு.ராஜு-ஜெயா (good day beauty borler) அவா்களுக்கும் மற்றும் வருகைதந்து சிறப்பித்த ரசிகப்பெருமக்களுக்கும் மனமாா்ந்த நன்றிகள்….” என்று பதிவிட்டுள்ளார்.
கிராமியப் பாடல்கள் மூலம், ரசிகர்களை கவர்ந்த இந்த ஜோடி சமீபத்தில் தான் தங்களது சொந்த ஊரான புதுக்கோட்டையில் பெரிய மாடி வீடு ஒன்றை கட்டியது குறிப்பிடத்தக்கது.