சிங்கப்பூரில் 10,000 சிவப்பு, வெள்ளை கொடிகளுடன் தேசிய தின “ஒற்றுமையின் கொடி” கொண்டாட்டம்..!

Sentosa Celebrates National Day 2020
Sentosa Celebrates National Day 2020 (Photo: Sentosa website)

சிங்கப்பூர் செந்தோசாவின் சிலோசோ கடற்கரையில் “ஒற்றுமையின் கொடி” அதாவது 10,000 சிவப்பு, வெள்ளைக் கொடிகள் அலங்கரிக்கப்பட உள்ளன.

இது சிங்கப்பூரின் தேசிய தினக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக அமைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் அதிபர் ஹலிமா யாகோப் தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்பு..!

இந்த ஆண்டு NDP2020 சின்னம் மற்றும் “Together. A Stronger Singapore” என்ற கருப்பொருளை வெளிப்படுத்தும் விதமாக அமையும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அலங்கரிக்கப்பட்ட உள்ள ஒவ்வொரு கொடியிலும் பொதுமக்கள் தங்கள் வாழ்த்துகளைப் பதிவு செய்து கொள்ளலாம்.

இதில் பொதுமக்கள், வரும் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை www.sentosa.com.sg/ndp2020 என்னும் இணைப்பக்கத்தில் தங்களுடைய வாழ்த்துகளைப் பதிவுசெய்யலாம்.

ஒவ்வொரு 20வது பங்கேற்பாளருக்கும் அஞ்சல் வழியாக ஒரு சென்டோசா தேசிய தின நினைவு பரிசு கிடைக்கும் என்று இணையப்பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : நான்கு மடங்கு வேகத்தில் COVID-19 சோதனை முடிவுகள் – சிங்கப்பூர் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg
?? Sharechat  https://sharechat.com/tamilmicsetsg