பாலியல் சேவைகள் வழங்கிய சந்தேகத்தில் 9 பெண்கள் கைது – ஆறு பேரின் வருகை அனுமதி ரத்து

sexual services arrested Middle Rd
Unsplash

வியட்நாம் நாட்டை சேர்ந்த, 21 முதல் 31 வயதுக்குட்பட்ட ஒன்பது பெண்கள் பாலியல் சேவைகளில் ஈடுபட்டதாக சந்தேகத்தின்பேரில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் 22 முதல் 31 வயதுக்குட்பட்ட 6 பேர் நாடு கடத்தப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களின் குறுகிய கால வருகை அனுமதிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சமூக அளவில் இந்த வாரம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,000ஐ கடந்தது

கடந்த ஜூலை 21ம் தேதி மிடில் ரோடு அருகே இரண்டு குடியிருப்பு பிரிவுகளில் காவல்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அப்போது, ஆன்லைன் வலைத்தளம் வழியாக பெண்கள் பாலியல் சேவைகளை வழங்கியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

குற்றவாளிகளுக்கு ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், S$100,000க்கு மிகாமல் அபராதமும் விதிக்கப்படலாம்.

மீதமுள்ள மூன்று பெண்கள் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

சிகரெட்டு துண்டை தூக்கி வீசியதால் ஏற்பட்ட தீ – இந்திய ஊழியருக்கு சிறை