“தமிழ் மொழிக்கும், கலாச்சாரத்திற்கும் சிங்கப்பூர் அரசின் ஆதரவு எப்போதும் உண்டு” – அமைச்சர் ஈஸ்வரன்..!

தமிழ் மொழிக்கும், கலாச்சாரத்திற்கும் சிங்கப்பூர் அரசின் ஆதரவு எப்போதும் உண்டு - அமைச்சர் ஈஸ்வரன்

தமிழ் மொழிக்கும், கலாச்சாரத்திற்கும் சிங்கப்பூர் அரசின் ஆதரவு எப்போதும் உண்டு என்று சிங்கப்பூர் தொடர்பு மற்றும் தகவல் அமைச்சர் அமைச்சர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ஈஸ்வரன் அவர்கள் சென்னையில் மியூசிக் அகாடமி சார்பில் நடைபெறும் மார்கழி மாத இசை நிகழ்சி துவக்க விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

இந்த இசை நிகழ்ச்சி துவக்க விழாவில், கர்நாடக இசை கலைஞர்கள் அருணா சாய்ராம், சுதா ரகுநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிங்கப்பூர் அமைச்சர் ஈஸ்வரன், தமிழ் மொழிக்கும், கலாச்சாரத்திற்கும் சிங்கப்பூர் அரசின் ஆதரவு எப்போதும் உண்டு என்று கூறினார்.

மேலும், இதுபோன்ற சங்கீத நிகழ்ச்சிகள் நடைபெறுவது தமிழ் கலாச்சாரத்தை வலுப்படுத்தும் என்றும் அவர் கூறினார்.