போலீஸாரிடம் தகராறு – சிங்கப்பூர் Everton பார்க்கில் 25 வயது இளைஞர் கைது.!

போலீஸாரிடம் தகராறு, வன்முறை தூண்டுதல் போன்ற பல்வேறு குற்றங்களுக்காக சிங்கப்பூர் Everton பார்க்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

பொதுவெளியில் மது அருந்திவிட்டு தவறான முறையில் வன்முறை தூண்டும் விதமாக போலீஸ் அதிகாரிகளை தங்கள் வேலையை செய்யவிடாமல் தடுத்த குற்றத்திற்காக 25 வயது இளைஞர் ஒருவர் கடந்த ஜூன் 9 ஆம் தேதி Everton பார்க்கில் கைது செய்யப்பட்டார்.

தொடர்ந்து ரகளையில் ஈடுபட்ட அந்த இளைஞரை போலீஸார் மின்சார வகை துப்பாக்கி மூலம் தாக்கி சுற்றி வளைத்து பிடித்தனர். கைது செய்யப்பட்ட இளைஞரை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அந்த இளைஞரை போலீஸார் சுற்றி வளைத்து பிடிக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.