சிங்கப்பூரைச் சேர்ந்த ஒரு நிறுவனம், COVID-19 தொற்றைக் குணப்படுத்தும் மருத்துவ பரிசோதனைகளை மனிதர்களிடம் அடுத்த வாரம் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது நோயாளிகளுக்கு COVID-19 தொற்றின் வளர்ச்சியைக் குறைக்கும், விரைவாக குணமடைய உதவும், மற்றும் கொரோனா வைரஸுக்கு எதிராக தற்காலிக பாதுகாப்பை அவர்களுக்கு வழங்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : சிங்கப்பூரில் புதிதாக 451 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதி..!
இன்று புதன்கிழமை (ஜூன் 10) ஊடக வெளியீட்டில், ஆரோக்கியமான தன்னார்வலர்களுக்கு முதற்கட்டமான மருத்துவ பாதுகாப்பு சோதனைக்கு சிங்கப்பூரைச் சேர்ந்த நிறுவனமான Tychan, சுகாதார அறிவியல் ஆணையத்திடம் (HSA) ஒப்புதல் பெற்றுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிறுவனம் TY027 என்ற மோனோக்ளோனல் ஆன்டிபாடி என்ற மருந்தை உருவாக்கியுள்ளது. இது COVID-19 தொற்றை ஏற்படுத்தும் கொரோனா வைரஸான SARS-CoV-2 ஐ குறிப்பாக குறிவைக்கிறது.
சுமார் 6 வாரங்களுக்கு நீடிக்கும் அந்த மருத்துவ சோதனையில் பங்கேற்க, 23 ஆரோக்கியமான தன்னார்வலர்ர்கள் முன்வந்துள்ளனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது, COVID-19 சிகிச்சைக்கு நிரூபிக்கப்பட்ட ஆன்டிபாடி அடிப்படையிலான சிகிச்சை எதுவும் இல்லை என்றும், SARS-CoV-2 தொற்றுநோயைத் தடுக்க உரிமம் பெற்ற தடுப்பூசியும் இல்லை என்று Tychan குறிப்பிட்டுள்ளது.
இந்த சோதனையின் முடிவுகளைப் பொறுத்து, அதைப் பயன்படுத்த பல்வேறு வழிகள் இருப்பதாக டியூக்-தேசிய பல்கலைக்கழக சிங்கப்பூர் (Duke-NUS) மருத்துவப் பள்ளியின் பேராசிரியர் Ooi Eng Eong கூறினார், அவர் அந்த நிறுவனத்தின் இணை நிறுவனர் ஆவார்.
முதற்கட்ட சோதனையின் வெற்றிக்குப் பிறகு, மேலும் அதிகமானோரிடம் சோதனை நடத்த அந்த ஆணையத்திடம் ஒப்புதல் கேட்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த மருத்துவ சோதனை வெற்றிபெற்றால், சுகாதாரப் பாரமரிப்பு ஊழியர்களுக்கு COVID-19 தொற்றுவதைத் தவிர்க்க, அவர்களுக்கு அந்த மருந்து வழங்கப்படலாம் என்றும், தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்வோருக்கும் அது பலனளிக்கும் என்றும் Tychan தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : சிங்கப்பூரில் பாதுகாப்பு விதிகளை மீறிய 5 வணிக நிறுவனங்கள் மற்றும் 53 தனி நபர்களுக்கு அபராதம்..!