சிங்கப்பூரில் மேலும் 408 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு..!

Singapore confirms 408 new COVID-19 cases, no new community infections
Singapore confirms 408 new COVID-19 cases, no new community infections

சிங்கப்பூரில் நண்பகல் (ஜூன் 1) நிலவரப்படி, புதிதாக 408 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

அதாவது தற்போதுவரை, சிங்கப்பூரில் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை 35,292ஆக உயர்ந்துள்ளது.

சமூக அளவிலான சம்பவங்கள் ஏதும் இல்லை என்றும் அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

புதிய சம்பவங்களில் பெரும்பாலானோர் வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் வசிக்கும் வேலை அனுமதி வைத்திருப்பவர்கள் என்றும் MOH குறிப்பிட்டுள்ளது.

கூடுதல் விவரங்கள் பின்னர் வெளியிடப்படும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.