சிங்கப்பூரில் கட்டுமானத் துறை பாதுகாப்பை மேலும் மேம்படுத்துவதற்கு தற்போது ஆளில்லா வானூர்தி இயந்திரங்களும், இயந்திர ரோபோ மனிதர்களும் பயன்படுத்தப்பட உள்ளன.
இதற்கான ஆய்வை வீடமைப்பு வளர்ச்சிக் கழகமும், அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் ஆய்வு முகமை அமைப்பும் (A*Star) சேர்ந்து நடத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறந்த வசிக்கும் இடங்களாக மாறும் வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகள்..!
இந்த மேம்பாடு குறித்த தகவலை தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ தெரிவித்தார்.
5ஜி அதிவேக தொழில் நுட்பத்தின் உதவியுடன் இயந்திர ரோபோ மூலமாக கட்டுமான திட்டங்கள் வேகமாகவும் சிறப்பாகவும் நடைபெற உதவி கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டுமானத் திட்டங்களை டிஜிட்டல் முறையில் கையாள உதவும் புதிய ஒருங்கிணைந்த தளம்!