சிங்கப்பூரில் புதிதாக 66 பேருக்கு COVID-19 தொற்று உறுதி..!

Singapore COVID-19 confirmed cases
Singapore COVID-19 confirmed cases

சிங்கப்பூரில் புதிதாக 66 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று (ஏப்ரல் 6) உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

இதுவரை சிங்கப்பூரில் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை 1,375ஆக உயர்ந்துள்ளது.

இதையும் படிங்க : லிட்டில் இந்தியாவில் பாதுகாப்பு காரணங்களுக்காக மூடப்பட்ட பிரபல மொபைல் கடை..!

குணமடைந்தோர்

மேலும், அன்றைய நிலவரப்படி மருத்துவமனையிலிருந்து மேலும் 24 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்று MOH தெரிவித்துள்ளது.

தற்போது வரை மருத்துவமனையிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் மொத்த எண்ணிக்கை 344ஆக உள்ளது.

மருத்துவமனையில் உள்ளோர்

மருத்துவமனையில் இன்னும் 571 உறுதிப்படுத்தப்பட்ட நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று MOH குறிப்பிட்டுள்ளது.

மருத்துவமனையில் உள்ள பெரும்பாலானோரின் உடல்நிலை சீராகவோ அல்லது மேம்பட்டோ வருகிறது.

மேலும், 25 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர் என்றும் MOH குறிப்பிட்டுள்ளது.

புதிய சம்பவங்கள்

புதிய சம்பவங்களில், ஒருவர் வெளிநாட்டிலிருந்து சிங்கப்பூர் வந்தவர். மற்ற 65 சம்பவங்கள் உள்ளூரில் பரவியதாக MOH குறிப்பிட்டுள்ளது.

மேலும் பாதிக்கப்பட்டோரில் 24 பேர் வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியுடன் தொடர்புடையவர்கள்.

30 புதிய நபர்களுக்கு எதனுடனும் தொடர்பு கண்டறியப்படவில்லை என்று MOH குறிப்பிட்டுள்ளது.

புதிதாக அடையாளம் காணப்பட்ட நோய் பரவும் குழுமங்கள், Little Gems பாலர்பள்ளி மற்றும் Kranji Lodge வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதி ஆகியவை என்றும் MOH குறிப்பிட்டுள்ளது.

சிங்கப்பூரில் இதுவரை மொத்தம் ஆறு பேர் இந்த வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

இதையும் படிங்க : சிங்கப்பூர் வீதிகளில் சீறிப்பாய்ந்து சென்ற அழகிய குதிரை – காணொளி…!