சிங்கப்பூரில் நேற்று ஜன. 20 நிலவரப்படி, புதிதாக 1,472 பேருக்கு COVID-19 பாதிப்பு பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சகம் (MOH) கூறியுள்ளது.
இதில் 1,133 பேர் உள்ளூர் அளவிலும், மேலும் 339 பேர் வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்தவர்கள் என்றும் MOH கூறியுள்ளது.
சுமார் 100,000 பேர் VTL வழியாக சிங்கப்பூர் வருகை.. டிக்கெட் விற்பனை 50% குறைக்கப்படும்
மேலும் ஒருவர் தொற்றால் உயிரிழந்ததாக சுகாதார அமைச்சகத்தின் (MOH) இணையதள தொற்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 845ஆக உள்ளது.
Omicron நோய்த்தொற்றுகள்
சிங்கப்பூரில் புதிதாக மொத்தம் 1,001 பேருக்கு Omicron நோய்த்தொற்றுகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
அதில் 952 பேர் உள்ளூர் அளவிலும், 49 பேர் வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்தவர்கள் என்றும் MOH கூறியுள்ளது.
நேற்றைய நிலவரப்படி, தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து சிங்கப்பூரில் 297,549 COVID-19 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.