சிங்கப்பூர் நிறுவனத்தின் துரிதமான PCR கையடக்க சோதனைக் கருவி!

Singapore unveils portable genetic test for COVID-19
Singapore unveils portable genetic test for COVID-19 (Photo Credit: Cell ID Pte. Ltd., Singapore)

சிங்கப்பூர் மருத்துவ தொழில்நுட்ப நிறுவனமான Cell ID ஒரு சிறிய PCR கையடக்க சோதனைக் கருவியை உருவாக்கியுள்ளது.

இதன் உதவியுடன் ஒருவருக்கு COVID-19 இருக்கிறதா என்பதை ஐந்து நிமிடங்களில் உறுதிப்படுத்த முடியும்.

சிங்கப்பூரில் தேக்கா நிலையம் உள்ளிட்ட இடங்களுக்கு சென்ற தொற்று பாதித்த நபர்கள்!

இதன் மூலம் சோதனை செய்பவர்களுக்கு சிறப்பு பயிற்சி அல்லது முடிவுகளை பெற ஆய்வகம் ஏதும் தேவையில்லை என்று தலைமை தொழில்நுட்ப அதிகாரி சாண்டர் சிம் (Xander Sim) கூறியுள்ளார்.

இந்த பரிசோதனை மடிக்கணினியில் உள்ள செயலி மூலம் இயக்கப்படுகிறது, மேலும் இதனை செயல்முறைபடுத்த இரண்டு மணி நேரத்திற்கும் குறைவான பயிற்சியே தேவைப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சோதனை கருவி தனிமைப்படுத்தும் இடம் மற்றும் வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியிலும் ஏற்கனவே சோதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Quiz PCR Biochip கிருமித்தொற்றுக்கான சோதனை முடிவுகளை, 97 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை தரும் திறன் கொண்டது.

இது மற்ற விரைவான சோதனைகளைப் போல் இல்லாமல் துரிதமாக ஆனால் குறைவான தனித்தன்மை மற்றும் உணர்திறன் கொண்டது.

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு சிறப்பு அன்பளிப்பு பைகள்!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…