சிங்கப்பூரில் இன்றைய நிலவரப்படி புதிதாக 12 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புதிதாக பாதிக்கப்பட்ட அனைவரும் வெளிநாட்டிலிருந்து சிங்கப்பூர் திரும்பியவர்கள் என்றும் அது கூறியுள்ளது.
சிங்கப்பூரில், முஸ்லிம்கள் ரமலான் மாதத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா? – விளக்கம்
அவர்கள் சிங்கப்பூர் வந்ததில் இருந்தே வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவில் உள்ளனர் அல்லது தனிமையில் வைக்கப்பட்டனர் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சமூக அளவில் அல்லது வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் புதிய பாதிப்புகள் ஏதும் இல்லை.
கூடுதல் தகவல் இன்றிரவு வெளியிடப்படும் எனவும் அது குறிப்பிட்டுள்ளது.
பேருந்தில் சிக்கி உயிரிழந்த ஆடவர் – கவனக்குறைவாக பேருந்தை இயக்கிய ஓட்டுநர் கைது!