சிங்கப்பூரில் இன்றைய (பிப், 22) மதிய நிலவரப்படி, புதிதாக 10 பேருக்கு கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டது.
புதிதாக சமூக அளவில் ஒருவருக்கு கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரில் பணிபுரியும் தந்தை… 10ம் வகுப்பு மாணவி காதல் பிரச்சனையால் தற்கொலை
மீதமுள்ள அனைவரும் வெளிநாட்டிலிருந்து சிங்கப்பூர் வந்தவர்கள் என அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அவர்கள் சிங்கப்பூர் வந்தவுடன் வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவின்கீழ் தனிமையில் வைக்கப்பட்டனர்.
வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் யாருக்கும் புதிதாக தொற்று ஏற்படவில்லை.
சிங்கப்பூரில் இதுவரை இந்த கிருமித்தொற்றால் மொத்தம் 59,879 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புதிய பாதிப்புகள் குறித்த விவரங்கள் இன்று இரவு வெளியிடப்படும்.
இனி திருச்சி – சிங்கப்பூர் இடையே தினசரி விமானங்களில் பறக்கலாம்!!