சிங்கப்பூரில் இன்றைய (மார்ச், 16) மதிய நிலவரப்படி, புதிதாக 11 பேருக்கு கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
புதிதாக பாதிக்கப்பட்ட அனைவரும் வெளிநாட்டிலிருந்து சிங்கப்பூர் வந்தவர்கள் என சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.
அனைத்து துறைகளிலும் வெளிநாட்டவர்களுக்கான வேலை வாய்ப்பு குறைவு
அவர்கள் சிங்கப்பூர் வந்தவுடன் வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவின்கீழ் தனிமையில் வைக்கப்பட்டனர் என்றும் அது குறிப்பிட்டுள்ளது.
தங்கும் விடுதியில் யாருக்கும் புதிதாக தொற்று ஏற்படவில்லை. மேலும், சமூக அளவில் யாருக்கும் பாதிப்பில்லை.
சிங்கப்பூரில் இதுவரை இந்த கிருமித்தொற்றால் மொத்தம் 60,128 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புதிய பாதிப்புகள் குறித்த விவரங்கள் இன்று இரவு வெளியிடப்படும்.
சிங்கப்பூரில் அதிக வருகையாளர்களை கொண்ட பொது இடங்களில் SafeEntry Gateways பதிவு முறை..!