சிங்கப்பூரில் சமூக அளவில் 14 பேர் பாதிப்பு – 11 பேர் டான் டோக் செங் மருத்துவமனையுடன் தொடர்பு

COVID-19 cases in Singapore
(Photo: MOM)

சிங்கப்பூரில் இன்று (மே 2) நண்பகல் நிலவரப்படி புதிதாக 39 பேருக்கு COVID-19 நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களில் 14 பேர் சமூக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர், மீதமுள்ள அனைவரும் வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்தவர்கள்.

சிங்கப்பூரின் உதவிக்கு நன்றி தெரிவித்த இந்தியா!

சமூக அளவில் 11 பேர், டான் டோக் செங் மருத்துவமனையின் செவிலியருடன் தொடர்புடையவர்கள்.

மேலும், 10 பேர் சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தரவாசிகள் (PR) மற்றும் மூன்று பேர் வெளிநாட்டு வீட்டு பணிப்பெண்கள்.

தங்கும் விடுதியில் எந்த பாதிப்பும் இல்லை என்றும் சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் வசிக்கும் 2 ஊழியர்களுக்கு தொற்று