தடுப்பூசி போடப்பட்ட பயணிகளுக்கு எல்லைக் கட்டுப்பாடுகளில் மாற்றம் செய்யப்படுமா?

riot 1988 headman arrested jailed
(Photo: TODAY)

COVID-19 கிருமித்தொற்றுக்கான தடுப்பூசி போடப்பட்ட பயணிகளுக்கு எல்லைக் கட்டுப்பாடுகளில் மாற்றம் செய்வது குறித்து பரிசீலனை மேற்கொள்ள கூடுதல் தகவல்கள் தேவை என கூறப்பட்டுள்ளது.

டிஜிட்டல் தடுப்பூசி பாஸ்போர்ட் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்விக்கு, சுகாதாரத்துறை மூத்த துணையமைச்சர் ஜனில் புதுச்சேரி அவ்வாறு பதில் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரின் 2022ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்கள்!

தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கான பாதுகாப்பு குறித்த தகவல்கள் நம்பிக்கை அளிக்கும் வகையில் இதுவரையில் இருப்பதாக அவர் தெளிவுபடுத்தினார்.

ஆனால், அவர்களுக்கான எல்லை கட்டுப்பாடுகளில் மாற்றம் குறித்து பரிசீலனை செய்ய அதிகமான தகவல் அவசியம் என்றும் அவர் கூறினார்.

தற்போது பல்வேறு COVID-19 தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன, கட்டுப்பாடுகள் அதற்கு ஏற்றவாறு மாற்றப்பட வேண்டுமா என்பது குறித்து ஆராயவும் அதிக தகவல்கள் தேவை.

அரசாங்கம் தொடர்ந்து தகவல்களை மதிப்பீடு செய்து வருவதாக கூறிய அவர், மறுஆய்வு செய்யும் என்றும் அவர் கூறியுள்ளார்.

தடுப்பூசி போட்டுக்கொண்ட ஒருவரின் நிலையை நிரூபிக்க எளிதான, வசதியான நடவடிக்கையை சுகாதார அமைச்சகம் (MOH) மேற்கொள்ளும் என்றும் கூறப்பட்டுள்ளது.

வெளிநாட்டு ஊழியர்களுக்கு S$1 மில்லியன் மதிப்பிலான ‘சிங்கப்பூர் ரீடிஸ்கவர்’ ரசீதுகள் நன்கொடை..!