அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள சிங்கப்பூர் துணை பிரதமரும், நிதியமைச்சருமான லாரன்ஸ் வோங், செப்டம்பர் 20- ஆம் தேதி அன்று தலைநகர் டெல்லியில் இந்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியாவை நேரில் சந்தித்துப் பேசினார்.
MRT ரயிலில் சிறுநீர் கழித்த பெண் – வீடியோ வைரல்.. நெட்டிசன்கள் காட்டம்
அப்போது, இந்தியா மற்றும் சிங்கப்பூர் இடையே சுகாதாரத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது உள்ளிட்டவைக் குறித்து இருவரும் ஆலோசித்தனர். இந்த ஆலோசனையில் இந்தியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய இரு நாடுகளின் உயரதிகாரிகள் மற்றும் தூதரக அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.
சுமார் 3,200-க்கும் மேற்பட்ட தவறான வீடியோ: ஷூவில் ரகசிய கேமரா… சிக்கிய மருத்துவர்
அதேபோல், டெல்லியில் இந்திய மின்சாரம் மற்றும் எரிசக்தி, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறை அமைச்சர் ஆர்.கே.சிங்கை நேரில் சந்தித்த சிங்கப்பூர் துணை பிரதமர் லாரன்ஸ் வோங், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் க்ரீன் ஹைட்ரஜன் போன்ற துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான வழிகள் உள்ளிட்டவைக் குறித்து ஆலோசனை நடத்தினர்.