திருச்சி விமான நிலையத்தில் சிங்கப்பூர் பயணிகளிடம் சோதனை – சிங்கப்பூர் டாலர் பறிமுதல்..!

Singapore dollar seized at Trichy airport

திருச்சி விமான நிலையத்தில், SGD $11180 (தோராயமாக) சிங்கப்பூர் டாலரை கடத்த முயன்றவர் அதிகாரிகளின் சோதனையில் சிக்கினார்.

ஏர் இந்தியா விமானத்தில், திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு செல்லவிருந்த பயணிகளின் உடைமைகளை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் தமிழ் எண்களால் வடிவமைக்கப்பட்ட மணிக்கூண்டு கோபுரம்!

இதில் திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியை சேர்ந்தவர், (தோராயமாக) SGD $11180  சிங்கப்பூர் டாலரை (இந்திய ரூபாய் மதிப்பில் 5.90 லட்சம் மதிப்புள்ள) தனது உடைமைக்குள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

இதனை அடுத்து, மறைத்து வைத்திருந்த சிங்கப்பூர் டாலரை, அதிகாரிகள் பறிமுதல் செய்து அவரிடம் தீவிர விசாரனை நடத்தி வருகின்றனர்.

தகவல் : தமிழக ஊடகங்கள்

இதையும் படிங்க : மர்மமான வூஹான் வைரஸ்; முதல் நபரை உறுதிப்படுத்திய சிங்கப்பூர்..!