சிங்கப்பூரில் இன்று புதன்கிழமை (ஜன. 13) நண்பகல் நிலவரப்படி, புதிதாக 38 பேருக்கு COVID-19 பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் ஒரு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது, கடந்த டிசம்பர் 15 பிறகு தங்கும் விடுதியில் முதல் பாதிப்பு பதிவாகியுள்ளது.
சிங்கப்பூர் SIA ஊழியர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடக்கம்!
சமூக அளவில் யாரும் புதிதாக பாதிக்கப்படவில்லை என்றும் MOH தெரிவித்துள்ளது.
மீதமுள்ள 37 பேர் வெளிநாட்டிலிருந்து இங்கு வந்தவர்கள்.
அவர்கள் இங்கு வந்ததிலிருந்து வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவில் வைக்கப்பட்டனர் அல்லது வந்தவுடன் தனிமைப்படுத்தப்பட்டனர் என்று MOH தெரிவித்துள்ளது.
புதிய பாதிப்புகள் குறித்த விவரங்கள் இன்று இரவு வெளியிடப்படும்.
வெளிநாட்டு ஊழியர்களுக்கு குறைவாக சம்பளம் வழங்கிய நிறுவனத்திற்கு $119,500 அபராதம்!