சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த விமானத்தில், கேட்பாரற்று கிடந்த 1.450 கிலோ தங்கம்!

trichy-airport-singapore gold

சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த விமானத்தில், யாருடையது என்று தெரியாமல் கேட்பாரற்று கிடந்த 1.450 கிலோ தங்கம் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

நேற்று (மே 12) முன்தினம் சிங்கப்பூரில் இருந்து தனியார் விமானம் திருச்சி வந்தது, அதில் தங்கம் கடத்தல் நடைபெறுவது குறித்து அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

உணவங்காடி நிலையத்தில் பிடிபட்ட 6 பேர் – அபராதம் விதிப்பு

அதனை அடுத்து, பயணிகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்தனர். கூடுதலாக அவர்கள் விமான இருக்கைகள் உள்ளிட்ட இடங்களிலும் சோதனை செய்தனர்.

அப்போது, யாருடையது என்று தெரியாமல் கேட்பாரற்று கிடந்த 1.450 கிலோ தங்கத்தை அதிகாரிகள் கண்டனர். அதன் இந்திய மதிப்பு ரூ.75.71 லட்சம் என்றும் சொல்லப்படுகிறது.

அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள், அது தொடர்பான விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

அன்று மட்டும் சிங்கப்பூர், துபாய், சார்ஜாவில் இருந்து கடத்தி வரப்பட்ட கிட்டதட்ட 3 .5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அதாவது அதன் இந்திய மதிப்பு ரூ.2 கோடி என கூறப்படுகிறது.

சிராங்கூன் காபி கடையில் தீ… விரைந்த SCDF – ஒருவர் மருத்துவனையில் அனுமதி