குழந்தையுடன் கவலை மறந்து விளையாடும் வெளிநாட்டு ஊழியர்கள்…!

(PHOTO: Itsrainingraincoats/FB)

குழந்தையுடன் இருந்தால் நமது அனைத்து சோகங்களும் பறந்துவிடும் என்பது மறுக்கமுடியாத உண்மை.

குழந்தைகளின் சிரிப்பும், விளையாட்டும் நம்மை ஒரு குழந்தையாக மாற்றி, அதனுடன் சேர்ந்து விளையாட வைத்துவிடும் என்று கூறினால் அது மிகையாகாது.

தேக்கா நிலையம், அதைச் சுற்றியுள்ள கடைக்காரர்களுக்கு கொரோனா சோதனை!

சிங்கப்பூரில் தங்கள் குடும்பத்தை பிரிந்துவாடும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு இந்த மகிழ்ச்சிகரமான நிகழ்வு ஒன்று நடந்துள்ளது.

வெளிநாட்டு ஊழியர்கள் சிலர் உணவருந்திக்கொண்டிருக்கும்போது, அவர்களை நோக்கி வந்த குழந்தை ஒன்று அந்த ஊழியர்களுடன் இணைந்து உணவருந்தி சிரித்து மகிழ்ந்ததாக Itsrainingraincoats முகநூல் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த குழந்தையின் பெற்றோரிடமிருந்து வந்த செய்தி:

“1 வயது மற்றும் 3 வயது குழந்தைகள், ஊழியர் மாமாக்களுடன் இணைந்து புன்னகை மற்றும் சிற்றுண்டியையும் பகிர்ந்து கொள்ளும் ஒரு அழகான தருணம்” இது என்று அந்த முகநூல் பக்கம் குறிப்பிட்டு இருந்தது.

மேலும் “இந்த அற்புதமான முயற்சிக்கு ஏற்பாடு செய்த அனைவருக்கும் நன்றி” என்றும் கூறியதாக குறிப்பிட்டுள்ளது.

டிசம்பர் மாதத்திற்கான இந்தியா-சிங்கப்பூர் செல்லும் இருவழி விமானங்கள்

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…