சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் கே ஷண்முகம், இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசியிருக்கிறார்.
இதுகுறித்து அமித் ஷா வெளியிட்டுள்ள பதிவில், “சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் கே ஷன்முகத்துடன் ஒரு தித்திப்பான சந்திப்பு நடைபெற்றது. இதில், பரஸ்பரம் பல பிரச்சனைகள் குறித்து விவாதித்தோம்.
பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசு, இந்தியா – சிங்கப்பூர் இடையேயான நட்பை மேலும் வலுவாக்க முனைப்புடன் எதிர்நோக்கியிருக்கிறது” என்றார்.
இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தகம், பொருளாதாரம், புவிசார் அரசியல் உள்பட பல விவகாரங்கள் குறித்து இரு நாட்டு அமைச்சர்களும் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.
மேலும் படிக்க – உலகின் மிக பாதுகாப்பான நகரங்களின் பட்டியல்: சிங்கப்பூருக்கு எந்த இடம் தெரியுமா?