சிங்கப்பூரில் நடந்த தொழில் மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் உச்சிமாநாட்டில் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், “தெற்காசிய நாட்டின் வளர்ச்சிக்கான லட்சியத் திட்டங்களுக்கு மத்தியில், உள்கட்டமைப்புத் திட்டமிடல், நீர் பாதுகாப்பு மற்றும் வணிக விரிவாக்கம் போன்ற துறைகளில் சிங்கப்பூர் இந்தியாவுக்கு உதவ முடியும்” என்றார்.
மேலும், 2024 ஆம் ஆண்டில் 5 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக மாறுவதற்கான பார்வையை இந்தியா அமைத்துள்ளதாக சுட்டிக்காட்டினார் – இது தற்போதைய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இரு மடங்காகும்
அடுத்த ஐந்து ஆண்டுகளில் நகர்ப்புற உள்கட்டமைப்பு மற்றும் தீர்வுகளில் சுமார் 13.9 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்வதையும் நாடு நோக்கமாகக் கொண்டுள்ளது, ஏனெனில் இது விரைவாக நகரமயமாக்கப்பட உள்ளது.
இந்த துறையில் உள்ள நிறுவனங்களுக்கு இது ஒரு பெரிய வாய்ப்பை அளிக்கிறது என்று கூறிய டாக்டர் பாலகிருஷ்ணன், சிங்கப்பூர் இந்திய வணிகங்களையும் பார்வையாளர்களையும் நன்கு அறிந்து வரவேற்கிறது என்றார்.
மேலும் “இந்தியா நகரமயமாக்கப்படுதலில் நாங்கள் இயற்கையான கூட்டாளியாக இருப்பதாக நம்புகிறோம். நகர்ப்புற மேம்பாடு, திட்டமிடல் மற்றும் உள்கட்டமைப்பு நிதி ஆகியவற்றில் எங்கள் நிபுணத்துவம் இந்தியாவுக்கு முக்கியமானது.” என்றார்.