சிங்கப்பூர் உலகில் உள்ள சுமார் 232 நாடுகளில் இருந்து மதங்கள் அடிப்படையிலான பன்முகத்தன்மையில் முற்றிலும் வேறுபட்டது. Pew Research center, உலகலாவிய மதங்களின் பன்முகத்தன்மை அறிக்கையில் சிங்கப்பூர் முதலிடத்தில் உள்ளது.
பல இன, மொழி, மதம் மற்ற கலாச்சார மக்கள் ஒன்றிணைந்து அமைதியாய் வாழும் நாடு சிங்கப்பூர். பன்முகத்தன்மையை என்றும் நிலையாய் கொண்டுள்ள ஒரே நாடு என்றே கூறலாம்.
சிங்கப்பூருக்கு வருகை தரும் புதிய குடிமக்கள் மற்றும் வெளிநாட்டு தொழிலாளர்கள் இதன் பன்முகத்தன்மையோடு ஒன்றிணைந்து வாழ்கிறார்கள்.
இந்த வேறுபாடுகள் நமக்கு ஒற்றுமை எனும் பலத்தை தந்தாலும், சில சமூக பிழைக் கோடுகளையும் உருவாக்க தான் செய்கின்றன.
நாம் கவனமாக இல்லாவிட்டால், இந்த பிழையான கோடுகள் பூகம்பத்தைப் போல வெடித்து நம் ஒற்றுமையை சீர்குலைக்கும்.
இன்று நாம் அனுபவிக்கும் அமைதி மற்றும் செழிப்பைப் பாதுகாக்க நாம் நமது பங்கை சரியாக செய்ய வேண்டும். நமது சிங்கப்பூர், நமது பெருமை என்பதை அனைவரும் தங்களின் ஆழ்மனதில் நிலைநிறுத்த வேண்டும்.