COVID-19; மேலும் இரண்டு புதிய நபர்களை உறுதிசெய்த சிங்கப்பூர்..!

4 more COVID-19 patients discharged in Singapore, 2 new confirmed cases: MOH
4 more COVID-19 patients discharged in Singapore, 2 new confirmed cases: MOH

சிங்கப்பூரில் மேலும் நான்கு COVID-19 நோயாளிகள் மருத்துவமனையில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அதே நேரத்தில் இரண்டு புதிய சம்பவங்களை சிங்கப்பூர் உறுதி செய்துள்ளதாக (பிப்ரவரி 26) சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : சிகரெட் புகையினால் ஏற்பட்ட தகராறு; ரம்பத்தை கொண்டு முகத்தில் தாக்கியவருக்கு சிறை..!

இந்த புதிய சம்பவங்கள் மூலம் சிங்கப்பூரில் மொத்த நபர்களின் எண்ணிக்கையை 93ஆக உள்ளது.

மொத்தம் 62 நபர்கள் தொற்றுநோயிலிருந்து முழுமையாக மீண்டுள்ளனர் என்று புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் MOH தெரிவித்துள்ளது.

மேலும் மருத்துவமனையில் உள்ள 31 உறுதிப்படுத்தப்பட்ட நபர்களில், பெரும்பாலானவை சீராகவும் அல்லது உடல்நலம் மேம்பாட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது. தீவிர சிகிச்சை பிரிவில் ஏழு பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.

புதிய சம்பவங்கள்

புதிதாக உறுதிப்படுத்தப்பட்ட 92 மற்றும் 93 சம்பவங்கள் முறையே 47 வயதான சிங்கப்பூர் ஆடவர் மற்றும் 38 வயதான சிங்கப்பூர் ஆடவர் ஆவர்.

இருவரும் சீனா சமீபத்தில் செல்லவில்லை மற்றும் புதன்கிழமை காலை COVID-19 தொற்று உறுதி செய்யப்பட்டது.

சம்பவம் 92 உறுதிப்படுத்தப்பட்ட நபர் செங்காங் பொது மருத்துவமனையில் ஒரு தனிமைப்படுத்தப்பட்ட அறையில் உள்ளார்.

அதே நேரத்தில் சம்பவம் 93 உறுதிப்படுத்தப்பட்ட நபர் இங் டெங் ஃபாங் பொது மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட அறையில் உள்ளார்.

இதையும் படிங்க : குறிப்பிட்ட இரு பகுதிகளுக்கு சமீபத்தில் சென்றவர்கள் சிங்கப்பூருக்குள் நுழைய தடை..!