சிங்கப்பூர் வருமாறு மலேசிய பிரதமருக்கு சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் அழைப்பு!

Photo: Singapore Prime Minister Official Facebook Page

மலேசியா நாட்டின் 10- வது பிரதமராகப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ள அன்வர் இப்ராஹிமுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், கடிதம் மூலம் வாழ்த்துத் தெரிவித்திருந்த சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங், மலேசியா பிரதமரை நேற்று (25/11/2022) தொலைபேசியில் தொடர்புக் கொண்டு பேசினார்.

அதர்வா நடித்துள்ள ‘பட்டத்து அரசன்’ திரைப்படம் சிங்கப்பூரில் வெளியானது!

இது குறித்து சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில், “எங்களது இரு தரப்பு உறவை மேலும் வலுப்படுத்த, மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் மற்றும் அவர் தலைமையிலான அரசுடன் இணைத்துப் பணியாற்ற நான் ஆவலுடன் இருக்கிறேன்.

மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம்மை தனக்கு பல ஆண்டுகளாகத் தெரியும். கடைசியாக, அவரை கடந்த 2018- ஆம் ஆண்டு சந்தித்தேன். சிங்கப்பூருக்கு வந்திருந்த பிரதமர் அன்வர் இப்ராஹிம், சிங்கப்பூருக்கும், மலேசியாவுக்கும் இடையேயான இரு தரப்பு உறவுகளின் முக்கியத்துவம் குறித்து மாநாடு ஒன்றில் உரையாற்றியிருந்தார்.

வெளிநாட்டில் இருந்து திருச்சிக்கு கடத்தி வரப்பட்ட 222 கிராம் தங்கம் பறிமுதல்!

சிங்கப்பூருக்கும், மலேசியாவுக்கும் இடையே நீண்டகால நட்பு உள்ளது. இரு நாடுகளும் நெருங்கிய நாடுகளாகும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் விரைவில் சிங்கப்பூர் வருமாறு சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் அழைப்பு விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.