சிங்கப்பூரில் புதிதாக 23 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று (மார்ச் 17) உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.
இதுவரை சிங்கப்பூரில் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை 266ஆக உயர்ந்துள்ளது.
இதையும் படிங்க : சிங்கப்பூரின் ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் 4.8% சரிவு..!
சிங்கப்பூரில் கொரோனா சம்பவங்கள் உறுதிப்படுத்தப்பட்டதில் இருந்து, தினசரி சம்பவங்களில் இந்த எண்ணிக்கை தான் அதிகம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
குணமடைந்தோர்
மேலும், அன்றைய நிலவரப்படி மருத்துவமனையிலிருந்து மேலும் 5 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்று MOH தெரிவித்துள்ளது.
தற்போது வரை மருத்துவமனையிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் மொத்த எண்ணிக்கை 114ஆக உள்ளது.
மருத்துவமனையில் உள்ளோர்
மருத்துவமனையில் இன்னும் 152 உறுதிப்படுத்தப்பட்ட நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மருத்துவமனையில் உள்ள பெரும்பாலானோரின் உடல்நிலை சீராகவோ அல்லது மேம்பட்டோ வருகிறது என்று MOH குறிப்பிட்டுள்ளது.
மேலும், 14 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.
இதையும் படிங்க : சிங்கப்பூரில் மார்ச் கடைசி இரண்டு வாரங்களின் வானிலை நிலவரம்..!
புதிய சம்பவங்கள்
புதிதாகக் கிருமித்தொற்றியவர்களில் 17 பேர் வெளிநாட்டிலிருந்து சிங்கப்பூருக்கு வந்தவர்கள். இந்த 17 நபர்களில் ஏழு பேர் சிங்கப்பூரர்கள் என்று Straits Times குறிப்பிட்டுள்ளது.
மேலும் புதிய சம்பவங்களில் 2 பேர் முன்னர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவரோடு தொடர்புடையவர்கள்.
அதே போல், 4 பேருக்கு மேற்குறிப்பிட்ட எதனுடனும் தொடர்பில்லை என்றும் Straits Times குறிப்பிட்டுள்ளது.
#coronavirusSingapore #coronavirusnews #coronavirusupdateinSingapore #coronavirusupdate #coronavirusSingaporecases #coronavirusinSingapore #SingaporeLatestTamilnews #Tamilnews #சிங்கப்பூர்தமிழ்செய்திகள் #Singaporetamil