சிங்கப்பூரில் COVID-19 தொற்றால் மேலும் ஒரு உயிரிழப்பை சுகாதார அமைச்சகம் (MOH) உறுதிப்படுத்தியுள்ளது.
மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை தற்போதுவரை 18ஆக உள்ளது.
இதையும் படிங்க : சிங்கப்பூரில் புதிதாக 657 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதி..!
இதில் சிங்கப்பூரில் சம்பவம் 14,744 என அடையாளம் காணப்பட்ட 86 வயதான சிங்கப்பூர் பெண் உயிரிழந்தார்.
கடந்த ஏப்ரல் 27ஆம் தேதி அவருக்கு COVID-19 இருப்பது உறுதி செய்யப்பட்டது.
மேலும் அவருக்கு நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் ஹைப்பர்லிபிடீமியா போன்ற பிரச்சனைகள் இருந்ததாக MOH தெரிவித்துள்ளது.
கூ டெக் புவாட் மருத்துவமனை அவரது குடும்பத்தினரை அணுகியுள்ளது. மேலும் அவர்களுக்கு தேவையான உதவிகளையும் வழங்கி வருகிறது.
இதையும் படிங்க : COVID -19: வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதியில் சுமார் 10 மில்லியனுக்கும் அதிகமான உணவுகள் வழங்கப்பட்டுள்ளன..!