சிங்கப்பூரில் மேலும் ஒருவர் COVID-19 தொற்றால் உயிரிழந்ததாக சுகாதார அமைச்சகம் (MOH) குறிப்பிட்டுள்ளது.
இதில் 90 வயது சிங்கப்பூர் ஆடவர் ஒருவர் உயிரிழந்தார், அவர் இந்த தொற்றால் பாதிக்கப்பட்ட 1142ஆவது நபர் என்று பட்டியலிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : COVID-19: சிங்கப்பூரில் மேலும் 191 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு..!
மேலும், அவருக்கு ஏற்கெனவே உடல் நலப் பிரச்சினைகள் இருந்ததாகச் MOH தெரிவித்துள்ளது.
கடந்த ஏப்ரல் 3ஆம் தேதி அவருக்கு COVID-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது, அதே நாளில் தொற்று நோய்களுக்கான தேசிய மையத்தில் (NCID) அவர் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், அவரின் உடல் நிலை மோசமடைந்த காரணத்தால் (ஏப்ரல் 11) சனிக்கிழமை காலை உயிரிழந்தார்.
அவருடன் சேர்த்து, சிங்கப்பூரில் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 8ஆக உயர்ந்துள்ளது.
இதையும் படிங்க : சிங்கப்பூரில் பொதுப் போக்குவரத்தில் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்படும் – போக்குவரத்து அமைச்சர்..!
#coronavirusSingapore #coronavirusnews #coronavirusupdateinSingapore #Tamilnews #coronavirusupdate #coronavirusSingaporecases #coronavirusinSingapore #SingaporeLatestTamilnews #சிங்கப்பூர்தமிழ்செய்திகள் #Singaporetamil