சிங்கப்பூர் to சென்னை… கேட்பாரற்று கிடந்த பார்சல் – பயணியை தேடும் போலீஸ்!

சென்னை விமான நிலையத்திற்கு அதிக அளவில் பயணிகள் வருவதுண்டு. அங்கு அதிக அளவில் கடத்தல் பொருட்கள் சிக்குவதுமுண்டு.

இந்நிலையில், சிங்கப்பூரில் இருந்து வந்த விமானத்தில் கடத்தல் பொருட்கள் வருவதாக விமான நிலைய சுங்க இலாகா முதன்மை கமிஷனர் உதய்பாஸ்கருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது.

சிறுமியிடம் தகாத முறையில் நடந்துகொண்ட ஆடவர்… CCTV காட்சிகளை வைத்து தூக்கிய போலீஸ்

இதையடுத்து சிங்கப்பூரில் இருந்து வந்த பயணிகள் அமர்ந்திருந்த இருக்கைகள் சோதனை செய்யப்பட்டன. அதன் பின்னர், விமானத்தின் கழிவறைக்கு சோதனை செய்தபோது அங்கு கேட்பாரற்று பார்சல் ஒன்று இருந்துள்ளது.

சோதனை செய்ததில் அதனுள்ளே ஒரு கிலோ எடை கொண்ட ஒரு தங்கக்கட்டி இருந்துள்ளது. அதன் மதிப்பு ரூ.46 லட்சத்து 13 ஆயிரம் எனவும் கூறப்பட்டுள்ளது.

தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், அதனை கடத்தி வந்தது யார்? கழிவறையில் போட்டது யார், ஏன் ? என விசாரித்து வருகின்றனர்.

சிங்கப்பூரில் 12 வயது சிறுவனை இரு நாட்களாக காணவில்லை – கண்டுபிடிக்க உதவுங்கள் வாசகர்களே!