சிங்கப்பூரில் இருந்து கடந்த நவ.20 அன்று காலை 8.20 மணியளவில் இண்டிகோ விமானம் திருச்சி விமான நிலையம் வந்தது.
இந்த விமானத்தில் பயணித்து வந்த அனைவரும் வெளியேறிய பின்னர், விமானத்தை பணியாளர்கள் சுத்தம் செய்தனர்.
மெல்லும் புகையிலை, சிகரெட் பறிமுதல் – வெளிநாட்டவர் மீது குற்றச்சாட்டு
அப்போது விமான கழிவறையில் பொட்டலம் ஒன்று கிடக்க, உடனடியாக பணியாளர் விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து, அதனை அதிகாரிகள் கைப்பற்றி பிரித்தனர். அந்த பொட்டலத்தில் சுமார் ரூ.10 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பிலான 2 தங்க கட்டிகள் இருந்தது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அந்த பொட்டலத்தை சுங்க அதிகாரிகளுக்கு பயந்து பயணி யாரேனும் விட்டு சென்று இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இது குறித்து விசாரணை தொடர்ந்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
குற்றவாளிகளை தப்பிக்க வைக்க S$32,500 லஞ்சம்… சிக்கிய போலீஸ் அதிகாரி