“சட்டம் மட்டும் இருந்தால் போதாது”- அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் பேச்சு…

 

நற்பணி பேரவை நேற்று முன்தினம் (08/09/2021) இரவு ஏற்பாடு செய்த தேசிய தின கூட்ட உரைக்கு பிந்தைய கலந்துரையாடலில் காணொளி மூலம் கலந்துக் கொண்ட போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் உரையாற்றினார்.

“எல்லா நாட்டிலும் பிரச்சனைகள் இருக்கின்றன”- அமைச்சர் கா.சண்முகம்!

அப்போது அமைச்சர் கூறியதாவது, “நல்லிணக்கத்துக்காக நம் பள்ளிக்கூடங்களிலேயே எப்படி நம் மாணவர்களுக்கு இடையே அந்த உணர்வை ஏற்படுத்த முடியும். நடவடிக்கைகள் மூலம் அதை வளர்க்க முடியும் போன்ற பல யோசனைகள், அதேநேரத்தில் நாம் எப்படி அடித்தள அமைப்புகளின் தலைவர்களாக இருந்து கொண்டு எவ்வாறு நாம் செயல்பட முடியும். இந்த பணிக்கு நாம் எப்படி பங்காற்ற முடியும் என்பதை அவர்கள் அதற்காக இன நல்லிணக்கத்திற்கான பல சிந்தனைகளைப் பங்கேற்பாளர்கள் பகிர்ந்துக் கொண்டார்கள்.

மியான்மர் நாட்டிற்கு ஆக்ஸிஜன் கலன்களை வழங்கிய சிங்கப்பூர்.!

சட்டம் மட்டும் இருந்தால் போதாது. நம்மிடையே அந்த புரிந்துணர்வு, அந்த மனப்போக்கு இருக்க வேண்டும். அதுதான் இறுதியில் நம் நாட்டின் முன்னேற்றத்திற்கும், நம் சமுதாயத்தின் நல்லிணத்துக்கும் முக்கியமான அஸ்திவாரம். அதையும் இந்தக் கலந்துரையாடலில் பலர் அந்த கருத்தைத் தெரிவித்துக் கொண்டனர்.” இவ்வாறு அமைச்சர் கூறினார்.