சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த சிறப்பு விமானத்தில் இந்திய மதிப்பில் ரூ.33.53 லட்சம் மதிப்புள்ள தங்கம் கைப்பற்றப்பட்டது.
கொரோனா பரவல் காரணமாக இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
மறுமுறை பயன்படுத்தக்கூடிய முகக்கவசங்கள் 4வது முறையாக இலவச விநியோகம்!
இந்நிலையில், சிங்கப்பூரில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் திருச்சி வந்த பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த பயணியிடம் ரூ. 8 லட்சம் மதிப்பிலான 158 கிராம் தங்கமும், புதுக்கோட்டையை சோ்ந்த பயணியிடம் ரூ. 10 லட்சம் மதிப்பிலான 188 கிராம் தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும், பெரம்பலூரை சோ்ந்த பயணி ஒருவர் ரூ. 8.12 லட்சம் மதிப்பிலான 168 கிராம் தங்கத்தை சட்டத்திற்கு புறம்பாக கொண்டு வந்தது தெரியவந்தது.
பின்னர் அனைத்து தங்கங்களையும் சுங்கத்துறையினா் பறிமுதல் செய்தனா்.
ஒரே நாளில் மட்டும் 693 கிராம் தங்கம், அதாவது சுமார் ரூ. 35.53 லட்சம் மதிப்புடையவை திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.