சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த ஊழியர்களிடம் 2 கிலோ தங்கம் பறிமுதல் – அதிகாரிகள் அதிர்ச்சி

Singapore to trichy flight passengers covid update

சிங்கப்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்துக்கு பயணிகள் விமானம் வந்தது, இதில் அந்த விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக ரகசிய தகவல் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்துள்ளது.

அதன் பின்னர் சுங்கத்துறை அதிகாரிகள் விமான பயணிகளை சோதனை செய்தனர். அப்போது ஊழியரான சென்னை பகுதியை சேர்ந்த வினோத் குமார் என்பவரும், நாகப்பட்டினம் பகுதியை சேர்ந்த பக்ருதீன் என்பவரும் பிடிபட்டனர்.

நகரும் நடைபாதையில் சென்றுகொண்டிருந்த இருவரை பின்னால் இருந்து வேகமாக தாக்கிய டிராலி – வைரல் வீடியோ

சுமார் 2 கிலோ பசை வடிவில் மறைத்து வைக்கப்பட்ட தங்கத்தை அவர்களிடம் இருந்து அதிகாரிகள் கண்டுபிடித்து, அதனை பறிமுதல் செய்தனர்.

அதனை அடுத்து அவர்களை கைது செய்த போலீசார், அவர்களிடம் தொடர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணைக்கு பின் அவர்கள் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு, அதனை அடுத்து சிறையில் அடைக்கப்பட்டனர்.

பறிமுதல் செய்யப்பட்ட அந்த பசை வடிவ தங்கத்தின் மதிப்பு சுமார் ரூ 1 கோடி இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்தியப் பெண்களை வேலைக்கு எடுத்து, அவர்களிடம் Work permit, பாஸ்போர்ட்டை கைப்பற்றி கடத்தி அடித்து துன்புறுத்தியவருக்கு சிறை, அபராதம்!