சட்டவிரோதக் குழுக்களில் இருந்த சந்தேகத்தின் பேரில் 20 முதல் 48 வயதுக்குட்பட்ட 24 ஆண்கள் கைது செய்யப்பட்டதாக காவல்துறை நேற்று (டிசம்பர் 24) தெரிவித்தனர்.
குற்றவியல் புலனாய்வுத் துறை, மத்திய காவல் பிரிவு, Tanglin காவல் பிரிவு மற்றும் ஜுராங் காவல் பிரிவு அதிகாரிகள் தீவு முழுவதும் மேற்கொண்ட அமலாக்க நடவடிக்கையின் போது அவர்களை கைது செய்தனர்.
சிங்கப்பூர் 3ஆம் கட்டத்தில் சுற்றுலாத் தலங்களின் வருகை அனுமதி விவரம்!
இந்த நடவடிக்கை டிசம்பர் 21 முதல் டிசம்பர் 24 வரை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ரகசிய குழுக்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, பல்வேறு முக்கிய இடங்கள் மற்றும் வணிக வளாகங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
ஆண்டு இறுதி பண்டிகை காலங்களில், பொதுமக்களின் பாதுகாப்பை அச்சுறுத்தும் குழு நடவடிக்கைகளை தடுக்க சிங்கப்பூர் முழுவதும் தொடர்ந்து கண்காணிப்பதோடு அமலாக்க நடவடிக்கைகளை முடுக்கிவிடும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
காவல்துறை விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.
விதிமுறைகளை மீறிய பிரபல பிரியாணி உணவகம் உள்ளிட்ட 16 உணவகங்களுக்கு அபராதம்!