காலநிலை மாற்றத்தின் விளைவாக சிங்கப்பூரில் எதிர்வரும் நாட்களில் கடுமையான வெப்பம் மிகுந்த பகல் பொழுதுகளும் கடும் குளிரான இரவுப்பொழுதுகளும் நிகழும் என்று தேசிய சுற்றுப்புற வாரியம் முன்னறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
வானிலை மாற்றங்கள் அடிக்கடி ஏற்படுவதால் இவ்வாறு நிகழக்கூடும் என்று கருதப்படுகிறது.இதனைத் தொடர்ந்து வானிலை முன்னறிவிப்புத் திறனை வலுப்படுத்துவதற்கும் சிங்கப்பூர் வானிலை ஆய்வு,மேம்பாட்டுப் பணிகளுக்கும் அதிகமாக முதலீடு செய்துள்ளதாக வாரியம் தெரிவித்துள்ளது.
பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தைச் சமாளிக்க இது உதவும்.கடந்த நிதியாண்டிற்கான வாரியத்தின் ஒருங்கிணைந்த நீடித்த நிலைத் தன்மை அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது.