தங்கம் கடத்தல் காரணமாக இலங்கை விமான நிலையத்தில் சிங்கப்பூர் தம்பதியர் கைது.!

சிங்கப்பூரை சேர்ந்த தம்பதியர் தங்கம் கடத்தலில் ஈடுபட்டதற்காக இலங்கையில் வைத்து கைது செய்யப்பட்டனர், அவர்கள் கடத்திய தங்கத்தின் மதிப்பு $199,000 வெள்ளி என குறிப்பிடப்பட்டுள்ளது.

45 மற்றும் 55 வயதுக்கு இடைப்பட்ட தம்பதியர் தங்கத்தை கடத்தியதற்காக இலங்கை பண்டாரநாயக் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து ஜூன் 28 அன்று கைது செய்யப்பட்டனர். சுங்கவரி அதிகாரிகள், அந்த தங்கத்தின் எடை சுமார் 5 கிலோ என தெரிவித்துள்ளனர். இந்த தகவல் இலங்கை adaderana.lk செய்தி தளத்தில் வெளிவந்துள்ளது.

சிங்கப்பூரில் ஒரு முன்னணி மணி எக்ஸ்சேஞ்ச் நிறுவனத்தில் அந்த தம்பதியர் முதலாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது. 2019 ஆம் ஆண்டில் மட்டும் இருவரும் 6 முறை இலங்கைக்கு சென்று வந்துள்ளனர்.

இலங்கையில் இந்த கடத்தல் சம்பவம் தொடர்ந்து நடைபெற்ற வண்ணம் உள்ளது. சென்ற மாதம் தங்கம் கடத்தல் சம்பந்தமாக 6 இந்தியர்கள் கைது செய்யப்பட்டது குறி்பிடத்தக்கது.