தங்க கொலுசை, வெள்ளி கொலுசாக மாற்றி கடத்தி வந்த பயணி திருச்சி விமான நிலையத்தில் பிடிபட்டார்.
திருச்சிக்கு துபாயில் இருந்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் வழக்கம் போல் சோதனை செய்தனர்.
அப்போது பெண் பயணி ஒருவர் மீது சந்தேகம் ஏற்பட்டதை அடுத்து, அவரின் கொலுசை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது தங்க கொலுசில் அவர் வெள்ளி முலாம் பூசி விமானத்தில் கடத்தி கொண்டு வந்தது அதிகாரிகளுக்கு தெரியவந்தது.
பிடிபட்ட தங்கத்தின் இந்திய மதிப்பு ரூ.17.13 லட்சம் என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.
இது குறித்து அதிகாரிகள் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இரத்தம் தோய்ந்த துண்டான கால் வீடியோ இணையத்தில் பரவல்… கண்டெடுக்கப்பட்ட சடலம் – என்ன நடந்தது?