கட்டுமான பணியில் வெளிநாட்டு ஊழியர்கள் 3 பேர்… கவிழ்ந்து விழுந்த கலவை இயந்திரம்

Facebook/safetywatchsg

டவுனர் சாலையில் உள்ள வீடமைப்பு வளர்ச்சி கழக கட்டுமான பணிகள் நடந்துவரும் தளத்தில் மண் கலவை இயந்திரம் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.

இந்த சம்பவம் கடந்த சனிக்கிழமை (ஜூலை 30) காலை 9.30 மணியளவில் நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் இருந்து புதுக்கோட்டை வந்தவருக்கு திடீர் சிக்கல் – அவசர அவசரமாக அழைத்துச் செல்லும் அதிகாரிகள்!

இந்த தகவலை மனிதவள அமைச்சகம் (MOM) வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

L&M Foundation Specialist நிறுவனத்தால் பணியமர்த்தப்பட்ட மூன்று ஊழியர்கள் கொண்ட குழு அந்த இயந்திரத்தை சோதனை செய்து கொண்டிருந்தபோது அதன் பகுதி கழன்று விழுந்தது என MOM குறிப்பிட்டுள்ளது.

இந்த வேலையிட விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.