வெளிநாட்டில் இருந்து திருச்சிக்கு கடத்தி வரப்பட்ட 222 கிராம் தங்கம் பறிமுதல்!

Video Crop Image

இலங்கை நாட்டின் தலைநகர் கொழும்பில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் (SriLankan Airlines) மூலம் திருச்சி வந்த பயணிகளை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள், சோதனை செய்தனர். அப்போது, சந்தேகத்தின் பேரில் நான்கு பயணிகளின் உடைமைகளை அதிகாரிகள் அதிரடியாக சோதனை செய்தனர்.

கம்போடியாவில் நடைபெற்ற பரதநாட்டிய நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக மாணவிகள்!

பின்னர், பயணிகளின் பனியன்களை கழற்றுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தினர். அதில், தங்கம் உருக்கப்பட்டு, பனியன்களில் ஒட்டப்பட்டிருந்ததை சுங்கத்துறை அதிகாரிகள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அந்த தங்கத்தின் எடை சுமார் 222 கிராம் இருக்கும் என்றும், அதன் மதிப்பு ரூபாய் 11.50 லட்சம் இருக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதர்வா நடித்துள்ள ‘பட்டத்து அரசன்’ திரைப்படம் சிங்கப்பூரில் வெளியானது!

அந்த தங்கத்தைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், தங்கத்தைக் கடத்தி வந்த பயணிகள் நான்கு பேரிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.