சிங்கப்பூர் செல்ல தயாராக உள்ள பயணிகளுக்கு நற்செய்தி. ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் இந்த மாதம், அடுத்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கான விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யத் தொடங்கியுள்ளன.
விமானங்களின் அட்டவணையை ஏர் இந்தியா (Air India), ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் (Air India Express) வெளியிட்டுள்ளன.
இதையும் படிங்க : சிங்கப்பூரில் இந்திய பாஸ்போர்ட் விண்ணப்பிப்பவர்கள் கவனத்திற்கு..!
தமிழகத்தில், சென்னையிலிருந்து சிங்கப்பூர் செல்லும் விமானங்கள் அக்டோபர் 26 மற்றும் 2, 9, 16, 23 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், திருச்சியில் இருந்து வரும் அக்டோபர் 25 முதல் நவம்பர் 30 வரை, அதே போல கேரளாவின் கொச்சியில் இருந்து அக்டோபர் 30, 13, நவம்பர் 27 அன்று சிங்கப்பூருக்கு விமானம் இயக்கப்படும் என்றும் அது குறிப்பிட்டுள்ளது.
பயணம் தொடர்பான அனைத்து விதிகளையும் பயணிகள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
பயணிகள் வழிகாட்டுதல்களின்படி பயணத்தை நன்கு திட்டமிடுமாறு விமான நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஏர் இந்தியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணைய தளமான https://www.airindia.in/ லிருந்து கட்டணங்களை அறிந்து கொள்ள முடியும்.
இதையும் படிங்க : மீண்டும் நேரடி விமானச் சேவையை குறிப்பிட்ட பகுதிக்கு தொடங்கும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்..!